Tuesday, June 12, 2012

பால் தொழில்... பொங்கும் தருணம்!


'கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக...' என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். இன்றைக்குக் கிராமப்புறங்களில் இருந்துகொண்டு வேலைதேடி நகரங்களை நோக்கி அலைந்துகொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது, அந்தப் பழமொழியைக் கொஞ்சம் மாற்றிச் சொல்லவேண்டியிருக்கிறது. 'கையில் பாலை வைத்துக்கொண்டு வேலைக்கு அலைந்த கதையாக...' என்று! பால் விற்பனை என்பது அத்தனை லாபகரமான பிஸினஸ். ஆனால், அதில் என்ன பெரிதாக லாபம் வந்துவிடப் போகிறது என்று பலர் தயங்குகிறார்கள்.

இந்தப் புள்ளிவிவரத்தைப் படித்துவிட்டுச் சொல்லுங்கள்... இந்தியாவில் தனி நபர் ஒருவர் பயன்படுத்தும் பாலின் அளவு 230 கிராம். அண்மைக்காலமாக பால் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த 2008-ல் இந்தியாவில் 105 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. ஆண்டு பால் உற்பத்தி 2.5 மில்லியன் டன் அதிகரித்து வருகிறது. 2021-22-ல் நாட்டில் பால் தேவை ஆண்டுக்கு 180 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தேவையை ஈடுகட்ட தற்போதைய உற்பத்தியை இரு மடங்காக அதாவது ஆண்டுக்கு ஐந்து மில்லியன் டன்னாக அதிகரிக்கவேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது.

ஆக, தேவை இருக்கும் தொழிலில் இறங்குவதுதானே லாபம் தருவதாக இருக்கும்.

பால் வியாபாரத்தில் இறங்குவது என்றால் கறவை மாடுகளில் பாலைக் கறந்து கேனில் வைத்து வீடு வீடாக விற்பனை செய்யச் சொல்கிறீர்களா..?

அப்படிச் செய்யும் பால்காரர்கள் ஆயிரம் பேர் ஊர் ஊருக்கு இருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் அடுத்தகட்டத்துக்குச் செல்லுங்கள். மொத்தமாக பாலைக் கொள்முதல் செய்து பதப்படுத்தி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யுங்கள். ஒரு நாளுக்கு பத்தாயிரம் லிட்டர் பால் விற்பனை என்று இலக்கு வைத்துக்கொண்டு களத்தில் இறங்குங்கள். பத்தாயிரம் லிட்டர் பால் விற்பனை செய்ய முடிந்தால் லிட்டருக்கு 50 பைசா முதல் ஒரு ரூபாய்வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அடடா... இத்தனை லாபம் கொட்டும் தொழிலா இது... இதற்கு மூலதனம் என்ன தேவைப்படும்...?

முதலில் மனிதர்கள்தான் இதற்கு மிகப்பெரிய மூலதனம். ஏனென்றால், உங்களுக்கு பால் விற்பனை செய்யும் ஆட்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களிடம் உத்தரவாதம் பெறவேண்டும். காரணம், அவர்கள் எங்காவது அதை விற்றுக்கொண்டிருப்பார்கள். அவர்களை உங்கள் பக்கம் திருப்புவதுதான் முதல் வேலை. அதற்கு நாலு மாடுகள் வைத்திருப்பவரை ஐந்தாவதாக ஒரு மாடு வாங்க வைத்து, 'அந்த மாட்டுப் பாலை எனக்குக் கொடுங்கள்' என்று வளைக்கவேண்டும். அதன்பிறகு நம்முடைய அணுகுமுறையை வைத்து எல்லா பாலையும் நமக்கே விற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவார்.

அவர்கள் மாடு வாங்குவதற்கான கடனுக்கு வங்கியில் ஏற்பாடு செய்துகொடுப்பது... நீங்களே சிலரைத் திரட்டி குழுவாக வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்து ஊருக்குள் சிறு பண்ணை அமைத்துக் கொடுப்பது போன்ற விஷயங்களைச் செய்தால் உங்கள் பால் கொள்முதலுக்கு பக்காவான ஏற்பாடாக அமைந்துவிடும்.

சரி, கொள்முதலுக்கு பால் ரெடி... அதை எப்படி விற்பனை செய்வது? அதற்கான மார்க்கெட்டிங் ஏரியா எங்கே இருக்கிறது?

இந்த இடத்தில்தான் நீங்கள் டெக்னாலஜியைப் பயன்படுத்த வேண்டும். கும்பகோணம், விருத்தாசலம், நாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு தினசரி 50 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்யும் 'ஜி.கே.டெய்ரி'யின் நிர்வாக இயக்குநர் ஜி.கண்ணனிடம், இதுகுறித்து பேசும்போது, ''பாலைக் கொள்முதல் செய்து அப்படியே வீடுகளுக்கு சப்ளை செய்யும்போது பால் சப்ளை செய்பவர்கள் நுரை அடிக்க வைத்து அளவை வித்தியாசப்படுத்துவது, பாலில் தண்ணீர் சேர்ப்பது போன்ற தவறுகளைச் செய்து நம் கம்பெனியின் பெயரைக் கெடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால், பாக்கெட்டில் அடைத்து பாலை சப்ளை செய்தால் இந்தப் பிரச்னை இருக்காது'' என்றார்.

பாக்கெட் பால் என்றால், கறந்த பாலை வாங்கும் கிராமங்களில்கூட விற்பனை செய்யமுடியும். ஏனென்றால், கறந்த பால் என்றால் காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட நேரத்தில்தான் கிடைக்கும். அதுவே பாக்கெட் பால் என்றால் கடைகளில் எப்போதும் கிடைக்கும் என்பதால் மக்கள் தேவைப்படும்போது இதைத் தேடிவந்து வாங்க வாய்ப்பு இருக்கிறது.

அப்படிப் பார்த்தால் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வதற்கான இயந்திரங்கள் வாங்கவேண்டுமே...?

உண்மைதான்... தொழிலைக் கொஞ்சம் பெரிய அளவில் செய்யத் திட்டமிடும்போது அதற்கான முதலீடும் கொஞ்சம் அதிகமாகத்தான் செய்யும். கம்பெனியை உருவாக்க ஏற்ற இடம், பாலைப் பதப்படுத்துவதற்கான இயந்திரங்கள், அதைக் கொண்டு வருவதற்கும் கொண்டுபோய் கடைகளில் விற்பனைக்குக் கொடுப்பதற்கும் ஏற்ற வாகனங்கள் என்று சில அடிப்படையான தேவைகளைச் செய்துதான் ஆகவேண்டும்.





அலுவலகம், தொழிற்சாலை அமைக்க குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் இடம் தேவைப்படும். நீங்கள் எந்தப் பகுதியில் பாலைக் கொள்முதல் செய்யப்போகிறீர்களோ அந்தப் பகுதியிலேயே தொழிற்சாலையை அமைப்பது நல்லது. ஏனென்றால், பாலைக் கறந்து மூன்று மணிநேரத்துக்குள் அதைப் பதப்படுத்தும் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கவில்லை என்றால், அந்தப் பால் பயன்படுத்த முடியாததாகிவிடும். இயந்திரங்கள், வாகனங்கள் எல்லாம் வாங்க குறைந்தபட்ச முதலீடு என்றால் இரண்டரையிலிருந்து மூன்று கோடி ரூபாய் தேவைப்படும்.

அவ்வளவு பெரிய முதலீட்டுக்கு எங்கே செல்வது..?

இதற்கான முழுத் தொகையையும் நீங்கள் ரெடி செய்யத் தேவையில்லை. இந்தத் தொழிலைத் தொடங்கும் முன் மாவட்ட தொழில் மையத்தில் பதிவுசெய்து உரிமம் வாங்கிக்கொள்ளவேண்டும். அவர்களிடம் கேட்டால், கடன் வாங்குவதற்கான வழிமுறைகள், பிராஜெக்ட் அறிக்கை தயார் செய்வது போன்ற விஷயங்களில் உதவி செய்வார்கள். வங்கிகள் திட்ட அறிக்கையின் அடிப்படையில் கடன் அளிக்கின்றன. உங்கள் கையிலிருந்து 25% பணம் போட்டால் போதும். இந்தக் கடனுக்கான வட்டி 12-15% என்பது போல் கடன் தொகையைப் பொறுத்து அமையும். கடனை சுமார் 10-15 ஆண்டுகள் வரை கட்ட அனுமதிக்கிறார்கள்.

கடன் வசதி கிடைக்குமானால், முதலீட்டுக்குப் பிரச்னையில்லை. சரி, இந்த பாலைப் பதப்படுத்தி விற்பதற்கான வழிமுறைகள் என்ன?

இந்த டெக்னிக்கல் விஷயங்களை பிராக்டிகலாகத்தான் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். அனுபவம் பெற்ற கண்ணன் அதுபற்றிச் சொன்னபோது, ''கறந்த பாலை பிளாஸ்டிக் அல்லது அலுமினியம் கேன்களில் நிரப்பி தொழிற்சாலைக்குக் கொண்டு வரவேண்டும். அதை முதலில் குளிரூட்டவேண்டும். அடுத்து கருவிகளின் உதவியோடு பாலைச் சமச்சீர்படுத்தி (Pasteurization), நிலைப்படுத்தி (Homogenization) பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டும்.

200, 250, 500, 1,000 மில்லி என தேவைக்கு ஏற்ப அளவை செட் செய்துகொண்டு பாக்கெட் போட்டுக்கொள்ளலாம். எந்த அளவு உள்ள பால் அதிகமாக விற்கிறது என்பதை அறிந்து அந்த அளவு பாக்கெட்டை அதிகமாகத் தயாரியுங்கள். பால் பாக்கெட் கருவி ஒரு மணி நேரத்தில் 5,000 லிட்டர் பாலை பாக்கெட்டில் அடைத்துக் கொடுத்துவிடும் அளவுக்கு வேகமானதாக இருக்கும். இந்தக் கருவிகளை வாங்கத்தான் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு தேவைப்படும்.

பாலை நான்கு டிகிரி செல்ஷியஸில் கடைகளுக்கு அனுப்பவேண்டும். கெட்டுப் போகாமல் இருக்க பெரிய ஃபிளாஸ்க் போல் இருக்கும் இன்ஸூலேஷன் செய்யப்பட்ட வண்டியைப் பயன்படுத்தவேண்டும். இவற்றின் மூலம் டீலர்களுக்கு பால் பாக்கெட்களை சப்ளை செய்யவேண்டும். இதனை டீலர்கள் தங்கள் வசம் கடையில் அல்லது வீட்டில் உள்ள ஃப்ரீஸரில் பாதுகாப்பாக வைத்து, மறுநாள் அதிகாலை 4 மணி முதல் கடைகளுக்கு சப்ளை செய்யச் சொல்லவேண்டும். கடைக்காரர்கள் ஃப்ரிஜ்ஜில் வைத்து நுகர்வோருக்கு விற்பனை செய்யவேண்டும்'' என்றார்.

கண்ணனின் மகன் ஜி.கே.தியாகராஜன் 'ஜி.கே. டெய்ரி' நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருக்கிறார். அவர், ''கோடைக்காலத்தில் இன்ஸூலேடட் வண்டியில் டிரே மூலம் ஏற்றும்போது சில ஐஸ் கட்டிகளைப் போட்டு அனுப்பினால் சீக்கிரம் கெட்டுப்போகாது'' என்று கூடுதல் தகவலைச் சொன்னார்.

கோடைக்காலத்தில் தயிர், மோர் போன்றவற்றையும் பாக்கெட்டில் அடைத்து விற்கலாம்.

டெக்னிக் ஓகே... லாபக் கணக்குப் போடுவது எப்படி?

வாங்கும் பாலுக்கு விலை நிர்ணயம் செய்வதில்தான் லாபம் இருக்கிறது. பாலின் தரத்துக்கு ஏற்பதான் விலை கொடுத்து வாங்கவேண்டும். இந்தத் தரத்தை கெமிக்கல் உதவியோடு ஆய்வகத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், 'பால்மானி' என்ற 'லேக்டோ மீட்ட'ரும் உதவியாக இருக்கும். பாலில் அதிகக் கொழுப்புத் தன்மை மற்றும் கூடுதல் அடர்த்தி இருந்தால் அதிக விலை கொடுக்கலாம். இந்த வகையில் எருமைப் பாலுக்கு எப்போதும் நல்ல விலை உண்டு.

விற்பனை என்று வரும்போது சில அடிப்படையான விஷயங்களைக் கவனிக்கவேண்டும்.

பாலைப் பொறுத்தவரை நிலைப்படுத்திய பால் -(Standardisation Milk) ஒரு தரம். இதில் கொழுப்புச் சத்து (Fat) 4.5%. இதர சத்துக்கள் எஸ்.என்.எஃப். (S.N. F. - Solids Non - Fat) 8.5%. அடுத்து, சமச்சீர் பால் (Toned Milk) இதில் கொழுப்புச் சத்து (Fat) 3%. இதர சத்துக்கள் எஸ்.என்.எஃப். (S.N.F.-Solids Non-Fat) 8.5% அதிகக் கொழுப்புச் சத்து உள்ள பாலுக்குக் கூடுதலாகவும், கொழுப்புச் சத்து குறைந்த பாலுக்கு குறைவாகவும் விலை வைக்கவேண்டும். இதுதான் அடிப்படையான கணக்கு. மற்றபடி உங்கள் பகுதியில் விற்பனையாகும் பாக்கெட் பாலின் தரம் மற்றும் விலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்கள் பாலுக்கு விலையை நிர்ணயம் செய்யுங்கள்! வர்த்தகப் பயன்பாடு, ஓட்டல் பயன்பாடு போன்றவற்றுக்கான சப்ளை பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கேட்கும்போது எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறதே... நடைமுறையில் சிக்கல் ஏதாவது வர வாய்ப்பு இருக்கிறதா..?

சிக்கல் இல்லாத தொழில் ஏது? இதைப்பற்றி தென் மற்றும் கிழக்கு தமிழகத்தில் பால் விநியோகத் தொழிலில் இருக்கும். 'விஜய் பால்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜே.மதன் மோகன் கொஞ்சம் விரிவாகவே சொன்னார்.

''புதிதாக மார்க்கெட் பிடிப்பவர்கள் ஆரம்பத்தில் விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள். இது நீண்டகால அடிப்படையில் லாபகரமானதாக இருக்காது. தற்போது பால் கொள்முதலில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், பால் உற்பத்தியாளர்களுக்குக் கடன் உதவி, முன் பணம் போன்ற சலுகைகளைச் செய்யவேண்டி இருக்கிறது.

இந்தத் தொழிலில் 24 மணி நேரமும் இயங்கவேண்டி இருக்கும். இரவு நேரத்தில்தான் பேக்கிங், டீலர் சப்ளை போன்ற பணிகள் இருக்கின்றன. அதனால், கண்விழித்துச் சரியாக வேலை செய்யும் ஆட்களைத் தேடி அமர்த்தவேண்டும்.

அரசு அதிகாரிகள் பாலின் தரத்தை அடிக்கடி பரிசோதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொழுப்பு மற்றும் இதர சத்துக்கள் இல்லை என்றால் சிக்கல்தான். கிரிமினல் நடவடிக்கை இருக்கும். அதனால், கவனமாக இருக்கவேண்டும்'' என்றார்.

அனைத்தையுமே தெளிவாக எடுத்துச் சொல்லியாச்சு! இனி களத்தில் சந்திப்போம்..!

Thursday, May 10, 2012

ஆயிரம் மரம் வைத்த அபூர்வ திம்மக்கா!

'சாலு மரத திம்மக்கா’ என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்! எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!

இந்த பசுமைச் சேவைக்காக... சிறந்த தேசியக் குடிமகன் விருது, நான்கு குடியரசுத் தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விருதுகள், பல முதலமைச்சர்கள் அதிசயித்து அளித்த மாநில விருதுகள், தன்னார்வ, பெண் நல நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பட்டங்கள் என குவித்திருக்கும் திம்மக்கா பாட்டியின் கூதூர் கிராமம் இருப்பது... செல்போன் சிக்னல்கூட கிடைக்காத, பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில்!

பயணம் நெடுகிலும் திம்மக்கா பாட்டி வளர்த்திருக்கும் ஆலமரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன. வாசலில் நம்மைக் கண்டவுடன், முந்தானையில் முடிந்திருந்த கசங்கிய 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, டீ வாங்கிவர ஆள் அனுப்புகிறார். உடனடியாகக் குளித்து, விபூதி பூசி, பளிச்சென அணிந்து சிரிக்கிறார்... ஐந்து நிமிடங்களுக்குள்!

''ஏழைக் குடும்பத்துல பிறந்தவ நான். 16 வயசுல, என் எசமான் சிக்கையா கையில புடிச்சுக் கொடுத்துட்டாங்க. பேகூர்ல இருந்து கூதூருக்கு வந்துட்டோம். கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும், குழந்தை எதுவும் உண்டாகல. ஏறாத கோயில் இல்லை. விரதம் இருந்தே உடம்பு வீணா போச்சு. அக்கம்பக்கம் ஜாடை மாடையா பேசின பேச்சு, உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது... நிம்மதியான தூக்கமும் இருக்காது. ஒரு கட்டத்துல தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன்''
- இதைச் சொல்லும்போது, இந்த 101 வயதிலும் கண்கள் இடுங்குகின்றன.
''வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா..? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடினு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன்.

'குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணிவிட்டு... அந்தச் செடியையே புள்ளையா வளர்ப்போம். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவைத்தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல... ஊருக்கே நிழல் கொடுக்கும்’னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது.

இந்த கூதூர் முழுக்க பொட்டல் காடுதான். வெக்கையா தகிக்கும். ரோட்டோர சுமைதாங்கிக் கல் பக்கத்துல ஒரு ஆலங்கன்று நட்டு வளர்த்தேன். ஆரம்பத்துல, 'இது என்னாடி கிறுக்குத்தனம்?’னு கோபப்பட்டார் என் எசமான். ஆனா... அந்தச் செடி வேர் பிடிச்சு, இலை துளிர்த்து வளர்ந்தப்போ... வயிறு குளிர்ந்து, மனசு குளிர்ந்து நான் அடைஞ்ச சந்தோஷத்தை ரசிச்சவர், அதுக்குப் பிறகு மரம் நடுற வேலைகள்ல எனக்கு உதவிகள் செய்ய ஆரம்பிச்சார்!

காடு, மேடுனு அலைஞ்சி, திரிஞ்சி நிறைய ஆலமரக் கன்றுகளா கொண்டு வந்து, பதியம் போட்டு வளர்த்து, கொஞ்சம் பெருசானதும், ரோட்டோரத்துல குழி தோண்டி நட்டோம். இப்படி ஆலமரக் கன்றுகளா நட்டுட்டே இருந்தோம். மழை வரும்போதே குழிவெட்டி சேமிச்சாதான் தண்ணி. அப்படி சேர்ந்த தண்ணியை கிணத்துல, குளத்துல இருந்து எடுத்துட்டு வந்து நானும் எசமானும் கஷ்டம் பார்க்காம ஊத்தி ஊத்தி வளர்த்தோம்.

ஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்கு பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். 'சரியாயிடும்’னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, 'தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்’னு நான் சொல்ல, கண்கலங்கிட்டார்!''

- நாமும் கலங்கித்தான் போனோம்.

''அப்படி நாங்க அரும்பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள்தான், இன்னிக்கு உயர வளர்ந்து ஒய்யாரமா நிக்குது. இந்தப் பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையைச் சோலையாக்கித் தந்திருக்கு. தன் காலடியில கிடக்கிற அத்தனை பேருக்கும் நிழல் தருது. ஊரோட வெம்மையைத் தணிச்சு, குளிர்ந்த காத்தைக் கடத்துது. 'மரத்தை வெச்ச மகராசி, நீ நல்லா இருக்கணும்!’னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையைப் பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது!''

- திம்மாக்காவின் வார்த்தைகளை, சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது !

திம்மக்கா பாட்டியின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, இப்போது முதுமையில், தனிமையில் இருக்கிறார் பாட்டி. ஆனால்... சர்க்கரை, ரத்த அழுத்தம் என எந்த நோயும் இல்லை. கண் பார்வை அத்தனை துல்லியம். டெலிபோனில் பேசுமளவுக்கு கேட்கும் ஆற்றல்.

அவருடன் நடந்தால் மூச்சு வாங்குகிறது நமக்கு. அரசாங்கம் வழங்கும் முதியோர் நலத்திட்டத் தொகையான 500 ரூபாயை மட்டுமே ஆதார வருமானம். வாசலில் சாணி தெளிப்பது முதல் சமையல் வரை வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார் இந்த 101 வயதிலும்!

''ஊர்ல இருந்து டவுன் ரொம்ப தூரம்ங்கறதால, அவசர ஆத்திரத்துக்கு மருத்துவ உதவி இல்ல; பிரசவத்துக்குப் போற பொண்ணுங்க ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு பெங்களூருல, கவர்மென்ட் வீடு கொடுத்துருக்கு. ஆனா, அதை நான் பார்த்ததுகூட கிடையாது. அதெல்லாம் எனக்கு தேவையில்ல... எங்க ஊருல ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்தா போதும்!'' என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் இந்த 'செஞ்சுரி' பாட்டி... ஓர் ஆச்சர்யக்குறிதான்!’

( நன்றி - விகடன் இதழ் )

இவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு:

http://en.wikipedia.org/wiki/Saalumarada_Thimmakka
http://www.outlookindia.com/article.aspx?207401
http://www.hindu.com/2007/04/26/stories/2007042608260200.htm




Wednesday, May 9, 2012

வாகன உரிமையாளரை சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!

 
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.

092123 57123 என்ற எண்ணுக்கு vahan <space> <regn number without space>- வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.

இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.
 
 

Thursday, May 3, 2012

வென்ச்சர் கேப்பிட்டல் பற்றி தெரியுமா?

கலைஞர் ஸ்டைலில் வென்ச்சர் கேப்பிட்டல்  பற்றி ஒரு கேள்வி-பதில் பதிவு


 வென்ச்சர் கேப்பிட்டல் என்றால் என்ன?

புதுமையான தொழில்நுட்பமும் லாப நோக்கில் வேகமாக வளரக்கூடிய வளர்ச்சியும் கொண்ட ஒரு தொழிலுக்கு  தேவையான முதலீட்டைக் கொடுப்பதுதான் வென்ச்சர் கேப்பிட்டல். பொதுவாக இவர்களில் இரண்டு வகை உண்டு. அமைப்பு சார்ந்த முதலீட்டாளர்கள் என்பது ஒருவகை. தனிநபர்கள் அதாவது பெரும் பணக்காரர்கள் என்பது இன்னொரு வகை. முதல்வகையில் பல தனிநபர்கள் ஒன்று சேர்ந்து ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பணத்தை முதலீடு செய்வார்கள். இரண்டாவது வகையில் ஒரு பணக்காரர் மட்டும், தனக்குச் சரியென்று படும் திட்டத்தில் முதலீடு செய்வார். இரண்டாவது வகையைவிட முதல் வகையைச் சேர்ந்த நிறுவனங்களே வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களே அதிகம்.

வங்கியைப் போன்று தொழிலுக்குக் கடன் கொடுப்பவரா?

இல்லை.  வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் முதலீடு செய்யும் பணம் கடன் வகையைச் சேர்ந்தது அல்ல. வட்டியோடு அசலைக் கொடுத்து அவர்களின் கடனைக் கழித்துவிட முடியாது. அவர்கள் செய்யும்  முதலீட்டுக்கு  ஏற்ப  தொழிலை அவர்களுடன் பங்கு போட்டுக் கொடுக்கவேண்டும்.

வங்கிகளிலேயே கடன் வாங்கலாமே ஏன் வென்ச்சர் கேப்பிட்டல் முதலீட்டைத் தேடிப் போக வேண்டும்?

காரணம்,  வங்கிகள் கடன் கொடுக்க வேண்டுமானால் நம்மிடம் அடமானம் வைக்க சொத்து இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நமக்கு 5 கோடி ரூபாய் தேவைப்பட்டால், அதற்கு ஈடான சொத்தை வங்கிகளிடம் அடமானம் வைக்க வேண்டும். நம்மிடம் சொத்து ஏதும் இல்லாவிட்டால் என்ன செய்வது?  மேலும் நம்மிடம் இருந்தும் சிறிது முதலீட்டை வங்கிகள் எதிபார்க்கும். இந்த நிலையில் நமது தொழில் திட்டம் நிச்சயம் ஜெயிக்கும் என்று ஒரு வென்ச்சர் கேப்பிட்டல் நினைத்தால் தேவையான பணத்தைக் கொடுக்கும். வங்கிகளில் கடன் கிடைக்குமா?

எவ்வளவு பணம் முதலீடு செய்வார்கள்?

குறைந்தது  2 முதல் சில நூறு கோடிகளைக்கூட கொடுக்கலாம். நமது  தொழிலுக்கு எவ்வளவு பணம் தேவை, இப்போது அது எந்த நிலையில் இருக்கிறது? அந்தத் தொழில் நிச்சயம் வெற்றி பெறுமா? பணம் கொடுக்கும் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்தின் பணபலம் எப்படி என்கிற மாதிரி பல விஷயங்களைப் பொறுத்து கிடைக்கும் பணத்தின் அளவு மாறும்.


எப்போதெல்லாம் பணம் தருவார்கள் ?வென்ச்சர் கேப்பிட்டல்
நிறுவனங்கள் கிட்டத்தட்ட 6 படிநிலைகளில்  தொழிலில் முதலீடு செய்யலாம்.
  1. முதலாவது நிலையை ஏஞ்சல் ஃபண்டிங் ( Angel Funding )அல்லது சீட் கேப்பிட்டல் ( Seed Capital )என்று குறிப்பிடுவார்கள். nalla பிஸினஸ் ஐடியா இருந்தும் தொழில் தொடங்க  பணமில்லையே என்று ஏங்கித் தவிக்கும் ஒருவருக்கு தேவையான முதலீட்டைக் கொடுப்பதுதான் ஏஞ்சல் ஃபண்டிங். ஒரு தொழிலின் மிக ஆரம்ப கட்டம் இது.
    ஏஞ்சல் முதலீட்டளர்கள்  யார்?
  2. இரண்டாவது ஸ்டார்ட்-அப். ( Startup ) அதாவது, நாம் தயாரிக்கப் போகும் பொருளுக்கான சந்தையைக் கண்டுபிடித்து, அதை வளர்க்கத் தேவையான பணத்தைக் கொடுப்பதாகும். மார்கெட் ரிசர்ச் போன்றவை இதில் வரும்.
  3. மூன்றாவது நிலையை முதல் ரவுண்ட் முதலீடு என்கிறார்கள். ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதனை விற்பனை செய்வதற்குத் தேவையான பணத்தைக் கொடுப்பதுதான் இந்த நிலை.
  4. நான்காவது படியை இரண்டாவது ரவுண்ட் முதலீடு என்கிறார்கள். ஒரு தொழிலுக்குத் தேவையான நடைமுறை மூலதனத்தைக் (வொர்க்கிங் கேப்பிட்டலை) கொடுப்பது.
  5. ஐந்தாம் நிலையை மூன்றாவது ரவுண்ட் முதலீடு என்கிறார்கள். லாபம் சம்பாதிக்க ஆரம்பித்த ஒரு நிறுவனம், தன்னுடைய தொழிலை இன்னும் விரிவாக்கிக்கொள்ளச் செய்யப்படும் முதலீடு இது! இந்த நிலையில் செய்யப்படும் முதலீட்டை பலகனி முதலீடு ( Mezzanine பினன்சிங் ) என்றும் குறிப்பிடுகிறார்கள்.
  6. ஆறாவது படிநிலை என்பது இறுதிநிலை. நல்ல நிலையில் லாபம் சம்பாதிக்கும் ஒரு நிறுவனத்தை மேன்மேலும் விரிவாக்கவும் தொழில்நுட்ப விரிவாக்கத்துக்கும் தேவையான பணம் இந்த நிலையில் கொடுக்கப்படுகிறது. இதை பிரிட்ஜ் ஃபைனான்ஸிங் ( bridge financing )என்று சொல்வார்கள். ஒரு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனம் இந்த ஆறு படிநிலைகளில் எப்போது வேண்டுமானாலும் உள்ளே வரலாம்.

லாபத்தில் பங்கு வேண்டும் என்பதே வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் விதிக்கும் முக்கிய நிபந்தனை. நாம் செய்யும் தொழில் வருங்காலத்தில் இன்னும் பல மடங்காக செழித்து வளரும் என்று அந்த வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனம் நினைத்தால், முதலீட்டுப் பணத்தை நம் தொழிலிலேயே தொடர்ந்து வைத்திருக்கும். இல்லாவிட்டால் அவர்களுடைய பங்குகளை வேறு ஒரு நிறுவனத்திடம் லாபத்துக்கு விற்றுவிட்டு வெளியேறிவிடும்.

பிசினசில் அவர்களின் தலையீடு இருக்குமா?

பணத்தைப் போட்டுவிட்டு அவர்களின் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள் என்று நினைத்தால் தவறு. நமது  தொழிலில் அவர்கள் எத்தனை சதவிகிதம் முதலீடு செய்திருந்தாலும் அவர்களையும் உங்கள் நிர்வாகக் குழுவில் ( போர்டு )உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டாக வேண்டும். நாம்  தொழிலை எப்படிச் செய்யவேண்டும், எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும், விற்பனை எவ்வளவு இருக்க வேண்டும் என்கிற மாதிரியான அனைத்து விஷயங்களிலும் அவர்களின் ஆலோசனையைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மாத இலக்குகளை நிர்ணயிப்பதிலும் கவனமாக இருப்பார்கள்.

வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்தை எப்படி அணுகுவது?

முதலீட்டுத் துறையில் அனுபவமுள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் அணுகுவது  நல்லது. நாமே  அணுகும்பட்சத்தில் தொழில் திட்டத்தை  தெளிவாக எடுத்துச் சொல்லும் திறமை இருக்கவேண்டும். தொழில் திட்டத்தை மிகச் சரியாக எடுத்துச் சொல்லும் பட்சத்தில் தேவையான முதலீடு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது

Wednesday, May 2, 2012

உபயோகமான வலைத்தளங்கள் - 4 : இலவச வைரஸ் பரிசோதனை



  1. இன்றைய இணையதளங்களில், எந்த தளத்தில் என்ன மோசமான வைரஸ் அல்லது திருடும் நோக்கம் கொண்ட புரோகிராம் இருக்கும் என நம்மால் கண்டறிய முடியவில்லை.
  2. பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பி விடுகின்றனர்.
  3. இந்த சூழ்நிலையில், ஓர் இணைய தளம், இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை இலவசமாக நமக்குத் தருகிறது. இதன் வலைத்தள முகவரி : http://safeweb.norton.com/
  4. இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று, நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே காப்பி செய்து, அதற்கான இடத்தில் பேஸ்ட்செய்தால், சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
  5. இப்போதெல்லாம், நீளமான தள முகவரிகளைச் சுருக்கி நமக்குத் தருகின்றனர். இதில் எந்த தளம் மோசமானது என்று கண்டறிவதும் எளிதான காரியம் அல்ல.

இலவச வைரஸ் சோதனை செய்து தரும் மற்ற இணைய தளங்கள் :

http://www.virustotal.com/



இந்ததளத்தில் யு.ஆர்.எல் மட்டுமல்லாது, சந்தேகத்திற்குரிய பைல்களையும் சோதனை செய்ய முடியும். மிகபெரிய நன்மை என்னவெனில், வைரஸ் சோதனை 44 பலதரப்பட்ட ஆன்டி-வைரஸ் சாப்ட்வேரில் செய்யப்படுகிறது எனவே சோதனை தவறாவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

http://virusscan.jotti.org/en



இந்ததளத்தில் சந்தேகத்திற்குரிய பைல்களை மட்டும்  சோதனை செய்ய முடியும்.இதிலும் சோதனை பலதரப்பட்ட ஆன்டி-வைரஸ் சாப்ட்வேரில் செய்யப்படுகிறது.

Monday, April 30, 2012

உபயோகமான வலைத்தளங்கள்-3 : இரத்ததானம்

இரத்ததானம் என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம்

நோயாளிகள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள், விபத்தில் சிக்கிக் கொண்டு உடனடி சிகிச்சை கொள்ள துடிப்பவர்கள் அனைவருக்கும்  இரத்தம் ஓர் உடனடித் தேவையாகும். இது போன்ற சூழ்நிலைகளில் உதவ தன்னார்வத் தொண்டர்கள் பலர் ( நானும் இந்த தளத்தில் உறுப்பினர் தான்) உள்ளனர். ஆனால் அவசர காலத்தில் உடனடியாக அவர்களை தொடர்பு   கொள்ள  முடிவதில்லை.  இவர்களின் கைபேசி எண்களை  சேகரித்து  வைத்துள்ள  சேவை மையங்களின் மூலம்  தொடர்பு கொள்வதற்குள் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனைத் தடுக்கவே http://www.friends2support.org/   என்ற இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளம் சென்றால் இங்கு இரத்த வகை வாரியாக, தன்னார்வலர்களின் முகவரி கிடைக்கிறது. எந்த இடத்திற்கு இவர்கள் வர வேண்டும் எனக் குறிப்பிட்டால், உடனே அந்த இடத்திற்கு அருகே உள்ளவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தரப்படுகின்றன. இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு நாம் நேரடியாகவே இரத்தக் கொடையாளிகளுடன் பேசி அவர்களை வரவழைக்கலாம்.


அவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்கள் இயங்கவில்லை என்றால், உடனே இந்த தளத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம்,. அவர்கள் சார்ந்தவர்களைத் தொடர்பு கொண்டு சரியான தொலைபேசி எண்களைப் பெற்று, தளத்தில் அப்டேட் செய்கின்றனர்.   சேவை நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள மிகவும் உபயோகமான இணையதளம் இது.


Sunday, April 29, 2012

பிஸினஸ் ஐடியா இருக்கு, ஆனா முதலீடு இல்லை.

பிஸினஸ் ஐடியா இருக்கு, ஆனா முதலீடு இல்லை. வங்கி கடன் தருமா?


நம்மில் பெரும்பாலோனருக்கு பிசினஸ் பண்ணும் ஆசை இருக்கும். ஆனால் ரிஸ்க் எடுக்க தைரியம் இல்லாத காரணத்தாலோ அல்லது முதலீடு செய்ய கையில் பணம் இல்லாத காரணத்தாலோ அந்த முயற்சி தொடங்கப்படாமலே போய்விடும். தன்னம்பிக்கையும், ரிஸ்க் எடுக்கும் தைரியமும் உள்ளவர்களே வாழ்க்கையிலும், பிசினசிலும் சாதிக்கிறார்கள்.

20 வருடங்களுக்கு முன், நம் நாட்டில் தொழில் தொடங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால் இப்பொழுது அரசாங்கமே தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கிறது. நம்மிடம் நல்ல ஐடியா இருந்து முதலீடு மட்டும் இல்லையென்றால் உதவ முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன. இது பற்றிய மற்றொரு பதிவு (http://thinkbig360.blogspot.in/2012/04/blog-post_17.html) வங்கிகளின் மூலமும் கடன் பெறலாம். வங்கிகள் கடன் தர நம்மிடம்  சில தகுதிகளை எதிபார்க்கும்.


 பொதுவாக வங்கிகள் தொழில் முனைவோரிடமிருந்து  இருந்து நான்கு விஷயங்களை எதிர்பார்க்கும். இவற்றை 4C என்று  கூறுவார்கள்.

மூலதனம்.( Capital )

 தொழில் முனைவோரிடம் இருக்கும் மூலதனத்தை வைத்துதான் அவருக்கு எவ்வளவு கடன் கொடுக்கலாம் என்பதை வங்கி முடிவு செய்யும். குறைந்தது 10 முதல் 50 சதவிகிதம் வரை தொழில் முனைவோரிடம் மூலதனம் இருக்க வேண்டும்.


வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்கும் திறன்.( Capacity )

தொழில்முனைவோரிடம் இருக்கும் பிஸினஸ் பிளான். என்ன தொழில் செய்யப் போகின்றார் , எப்படி செய்யப்போகின்றார்  , போட்டியாளர்கள் இருக்கிறார்களா, என்ன மார்க்கெட் இருக்கிறது, என்ன லாபம் கிடைக்கும், அவருடைய முன் அனுபவம் என்ன என்பதையெல்லாம் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

குணநலன்.( Character )

தொழில் முனைவோர் யார், என்ன படித்திருக்கின்றார் , நம்பி கடன் கொடுக்கலாமா, வேறு ஏதாவது ஒரு வங்கியிலிருந்து கடன் வாங்கி அதைத் திரும்பக் கொடுக்காமல் போயிருக்கின்றாரா?, வழக்குகள் இருக்கிறதா?, அவரை  யார் அறிமுகம் செய்கிறார்கள் போன்ற  விஷயங்களையும் கவனிப்பார்கள்.

அடமானம்.( Collateral Security )

வாங்கும் கடனுக்கு ஈடாக அடமானம் கொடுக்கும் வகையில் தொழில் முனைவோரிடம் ஏதேனும் சொத்து இருக்கவேண்டும்.

மேற்சொன்ன நான்கு விஷயங்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்து, வங்கிகள் கேட்கும் மற்ற சில சான்றுகளையும் ( வருமானவரிச் சான்று )கொடுத்து விட்டால் , கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.

Saturday, April 28, 2012

உபயோகமான வலைத்தளங்கள்-2: இலவச மின்னூல்கள்


உங்களில் சிலருக்கு இந்த தளத்தைப பற்றி தெரிந்திருக்கலாம். ஆன்லைனில் உள்ள சிறந்த மின் நூல் நூலகம் இது. இதன் இணைய முகவரி http://booksbuddies.com/ நீங்கள் தன்னம்பிக்கை நூல்களை விரும்பி படிப்பீர்களா? ஆம் எனில் இந்த தளம் உங்களுக்கு உதவும்.


இந்த தளத்தில் இலவசமாகத் தரப்படும் நூல்கள் அனைத்தும் தன்னம்பிக்கையை ஊட்டும் நூல் களாகும். தன்னார்வத்துடன் பல துறைகளில் வளரத் துடிப்பவர்கள் தங்கள் இலக்குகளை எப்படி அமைக்க வேண்டும், எப்படித் திட்டமிட வேண்டும், சோம்பலைப் போக்கி, தளர்ச்சியை நீக்கி எவ்வாறு முன்னேற வேண்டும் என வழி காட்டும் பல நூல்கள் இங்கு உள்ளன.

இதில் உறுப்பினராகி நூல்களை இலவசமாக தரவிறக்கம் செய்திட மேலே தரப்பட்டுள்ள இணையப் பக்கம் சென்று, அங்கு உங்கள் விவரங்களை பதிவு செய்து கொண்டால் அதில் ஏற்கனவே தயாரான  வாசகத்துடன் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட ஒரு லிங்க் கிடைக்கும். இதனை அப்படியே உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். அதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்து உங்கள் நண்பர்களும் இது போல பதிந்து கொள்ளலாம். உங்கள் லிங்க் எதற்காகவென்றால், இந்த தளத்தில் பதிவு செய்து கொண்ட வுடன், இங்கு உள்ள நூல்களில் நான்கினைத்தான் நம்ம்மால் தரவிறக்கம்  செய்திட முடியும். உங்கள் நண்பர்கள், உங்கள் லிங்க் மூலம் பதிந்து கொண்டால், ஒவ்வொரு நண்பர் பதிவு செய்கையில், உங்களுக்கு மேலும் சில நூல்கள் தரவிறக்கம் செய்திட அனுமதி கிடைக்கும்.

நீங்கள் பதிவு செய்து கொள்ள விரும்பினால், எனது இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன். இதன் மூலம்  நானும் சில நூல்களை இலவசமாக பெறுவேன். எனது இணைய முகவரி  http://http//booksbuddies.com?ref=viswa75 இந்த தளத்தில் உள்ள இன்னொரு வசதி, பதிந்து கொண்டுள்ள நண்பர்களுடன் சேட் செய்திடலாம். நல்ல விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.

தொழில் வாய்ப்பு : 

எனக்கு தெரிந்து தமிழில் இது போன்று நூலகம் (ரெபரல் முறையில் இயங்கும் ) இருப்பதாக தெரியவில்லை. நாமும்  இது போன்று இணைய தளம் தொடங்கி நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்களின் நூல்களை பகிர்ந்து கொள்ளலாம் அல்லது மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். இணைய தளத்தில் விளம்பரங்களை இடம் பெற செய்வதன் மூலமும் வருமானம பெறலாம்.

உங்களது மேலான கருத்துகளை தெரிவிக்கவும். நன்றி.

Friday, April 27, 2012

உபயோகமான வலைத்தளங்கள்-1 சுருக்கிய வலைதள முகவரி


மின்னஞ்சல் மூலம் வலைதள முகவரியை ( யு.ஆர்.எல்.)அனுப்புவது எல்லோரும் செய்யக்கூடிய ஒன்றுதான். இதில் உள்ள அபாயம் என்னவென்றால், வலைத்தள முகவரி மிகவும் நீளமாக இருந்தால், முகவரி உடையக்கூடிய ( Break ) வாய்ப்பு அதிகம். உடைந்த முகவரியிலிருந்து, சரியானதைப் பெறுவதும் சற்று சிரமம். நீளமான யு.ஆர்.எல். முகவரியை சுருக்கி சிறியதாக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://tinyurl.com/




மிகப் பெரிய நீளமான இணைய தள முகவரிகளைச் சுருக்கி தரும் லிங்குகள் வழியாக மால்வேர்கள், வைரஸ்கள் நுழைவதற்கு வாய்ப்பு அதிகம். சுருக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல். முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://longurl.org/ இந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட இணைய முகவரியையும் தந்து, அது தீங்கு விளைவிக்கக் கூடியதா என அறிந்து கொள்ளலாம்.



மேலும் சில உபயோகமான வலைத்தளங்களை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Thursday, April 26, 2012

ஹார்டு டிஸ்க்கில் இடம் இல்லையா?

நவீன கணினி உலகில் ஹார்டு  டிஸ்க்-குகளின் வளர்ச்சியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் ஹார்டு  டிஸ்க்-குகளின் அளவு ஜிபியில் (GB ) வந்து கொண்டிருந்தது. தற்கால கணினிகள் டிபி ( TB ) எனப்படும் டெராபைட் அளவுகளில் வருகின்றன. தற்போது ஹார்டு  டிஸ்க்-குகளின் விலையும் பல மடங்கு கூடி விட்டது.

ஹார்டு  டிஸ்க்-குகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அவற்றை சரி செய்வதும் சற்று சிரமமான காரியம். பாதிப்புகுண்டான ஹார்டு  டிஸ்க்-குகளில் உள்ள கோப்புகளை திரும்பப் பெற நிறைய மென்பொருள்கள் இருந்தாலும், நமது கணினியில் அந்த ஹார்டு டிஸ்க் அறியப்பட்டால் ( detect ) மட்டுமே டேட்டாவை/கோப்புகளை ரெக்கவரி செய்ய முடியும். கணினியால் அறியப்படாத ( detect )  ஹார்டு  டிஸ்க்-கை அறியச் செய்ய எந்த மென்பொருளும் கண்டு பிடிக்கப் படவில்லை.

இப்படி பழுது ஏற்பட்ட ஹார்டு டிஸ்க்கில் நன்கு தேவையான முக்கியமான கோப்பு இருந்தால் ரெக்கவரி செய்ய ஹார்டு டிஸ்க்கை கழற்றினால் மட்டுமே  முடியும். இதற்கு தமிழ் நாட்டில்  100 எம்பிக்கு சுமார் 30 ,000 முதல் 40 , 000 வரை செலவாகும். எனவே புதிதாக ஹார்டு டிஸ்க் வாங்குவதற்கு பதில் இணையத்தில் சேமித்து வைப்பது நல்லது.

இதன் மூலன் நமக்கு வேண்டிய கோப்புகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திட முடியும். கோப்புகளை இன்னொரு கணினிக்கு மாற்ற பென்டிரைவையோ அல்லது எக்ஸ்டெர்னல் ஹார்டு டிஸ்க்-கையோ பயன் படுத்த வேண்டியது இல்லை. இணையத்தின் மூலம் எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைக்க பல கிளவ்டு ( cloud ) சேமிப்பு சேவைகள் உள்ளன. இவற்றில் கோப்புகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பத்திரமாக சேமிக்கப் படும். எளிய ட்ராக் அன்டு டிராப் முறையில் பைல்களை/கோப்புகளை சேமிக்க முடியம்.அவைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

அமேசான் க்ளவ்டு டிரைவ் : 



  • 5GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம். அமேசான் மியுசிக் ஸ்டோரில் இருந்து வாங்கப்படும் கோப்புகளுக்கு சேமிப்பு இலவசம்
  • 5GB க்கு மேல், ஒவ்வொரு 1GB - க்கும், ஆண்டுக்கு 1 $ செலுத்த வேண்டும்.
  • வலைத்தள முகவரி: https://www.amazon.com/clouddrive/learnmore
மைக்ரோசாப்ட் ஸ்கை டிரைவ் : 



  • 7GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்.இந்த சேவையை பயன்படுத்த ஒரு விண்டோஸ் லைவ் ஐடி போதுமானது.
  • 7GB க்கு மேல், ஒவ்வொரு 1GB - க்கும், ஆண்டுக்கு 0.5 $ செலுத்த வேண்டும்.
  • ஒரு பைலின் சைஸ் 3GB க்கு மேல் இருக்கக் கூடாது
  • வலைத்தள முகவரி: https://skydrive.live.com/
ட்ராப் பாக்ஸ் :


  • 2GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்
  • புதிதாக ஒருவரை இதில் இணைய செய்வதின் மூலம் 250MB இலவசமாக பெறலாம். இது 10GB க்கு மேல் உயராது.
  • 2GB க்கு மேல், ஒவ்வொரு 100GB - க்கும், ஆண்டுக்கு 200 $ செலுத்த வேண்டும்.
  • வலைத்தள முகவரி: https://www.dropbox.com/
பாக்ஸ் :


  • 2GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்
  • தனிப்பட்ட கணக்குகுகளுக்கு, ஒரு மாதத்திற்கு 9 .99 $ ( 25GB ), வணிக நிறுவனங்களுக்கு, ஒரு மாதத்திற்கு 15 $ ( 50GB )
  • வலைத்தள முகவரி: http://www.box.com/
கூகுள் ட்ரைவ்  :


  • 5GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்.இந்த சேவையை பயன்படுத்த ஒரு கூகுள்  ஐடி போதுமானது.
  • மிக சமீபத்தில் வெளிவந்த க்ளவ்டு சேவை இதுவே.
  • ஒரு வருடத்திற்கு  30 $ ( 25GB ),   60$ ( 100GB )
  • ஒரு பைலின் சைஸ் 10GB க்கு மேல் இருக்கக் கூடாது.
  • வலைத்தள முகவரி: https://drive.google.com/start
ஆப்பிள் ஐ க்ளவ்டு   :


  • 5GB வரையிலான டேட்டா சேமிப்பு இலவசம்.
  • ஒரு வருடத்திற்கு  40 $ ( 20GB ),   100$ ( 50GB )
  • பைலின் சைஸ்-க்கு எல்லை எதுவும் இல்லை.
  • வலைத்தள முகவரி: http://www.apple.com/icloud/get-started

Wednesday, April 25, 2012

வெற்றிக்கு ஒரு புத்தகம் - இட்லியாக இருங்கள்

'இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறேன் . ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது?'

'அலுவலகத்தில் என் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் எனக்கு  உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன? '

'வீட்டுக்கு போறதுன்னாலே வெறுப்பா இருக்கு, என் பேச்சுக்கு வீட்ல மரியாதையே இல்ல'



 இந்த மாதிரி புலம்பல்களை நீங்கள்  கேட்டிருக்கலாம், அல்லது நீங்களே கூட புலம்பியிருக்கலாம், 'இட்லி' எனப்படும் 'எமோஷனல் இன்டலிஜென்ஸ்' திறமையின்மையே இதெற்கெல்லாம் காரணம் என்பதை ஆசிரியர் நிறைய எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகின்றார். 

ஒருவர் படிப்பிலும், அறிவிலும் சிறந்து விளங்கினால் அவரை இன்டெலிஜென்ட் என்று சொல்கிறோம். 25 ஆண்டுகளுக்கு முன் வரை கூட, IQ (Intelligence quotient) தான் ஒருவரின் வெற்றியை தீர்மானிக்கின்றது என்றே நம்பப் பட்டு வந்தது. ஆனால் மேலை நாட்டினரின் ஆராய்ச்சி முடிவுகள்,

ஒரு மனிதனின் வெற்றியில் புத்திசாலிதனத்தின் பங்கு வெறும் 20 சதவிகிதம் என்றும், வேறு பல காரணங்கள் 80 சதவிகிதம்  என்று கூறுகின்றன.

அந்த 80 சதவிகிதத்தில் மிக முக்கியமான சதவிகிதத்தை பெற்றிருப்பது எமோஷனல் இன்டலிஜென்ஸ் எனப்படும்  ' தன்னையும் தன் உணர்சிகளையும்  திறம்பட நிர்வகித்துக் கொண்டு, பிறருடைய உணர்சிகளையும் புரிந்து கொண்டு நடக்கும் திறன்'  சுருக்கமாக சொல்வதென்றால் 'உணர்சிகளை கட்டுப்படுத்துவது' .

எந்த உணர்ச்சியையும் அடக்கு என்று சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. இயற்கையாக நமக்கு வருகின்ற உணர்சிகள் அனைத்தும் நம் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்ப்பவை தான். உணர்சிகளை வெளிக்காட்ட தெரியாவிட்டால் நம்மை ஜடம் என்று கூறி விடுவார்கள். அவை கொஞ்சம்  கூடுதலாகவோ குறைவாகவோ ஆகும்போதுதான் பிரச்சனை வெடிக்கிறது.

விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர் போன்ற பிரபலங்கள் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண்ட நிகழ்வுகளையும் விளக்குகின்றார்.

  • குத்து சண்டை போட்டியில் மைக் டைசன் ஹோலி பீல்டின் காதை கடித்தது.
  • கிரிக்கெட் போட்டியில் மியாண்டட் கிரண் மோரேவை வெறுப்பேற்றியது.
  • டாக்டர் செரியன் மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டது.
  • மணிரத்னம் அவர்களின் அண்ணன் தயாரிப்பாளர் ஜி.வி தற்கொலை செய்து கொண்டது.
இது போன்று பல எடுத்துக்காட்டுகள் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் மற்றொரு சிறப்பு, இக்கட்டான சூழ்நிலைகளில், உணர்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எப்படி முடிவுகள் எடுப்பது என்பதை குட்டி கதைகளின் (Case Studies ) மூலம் விளக்கப்பட்டுள்ளது.

மனித மூளையின் அமைப்பும், நம் உணர்சிகளுக்கும் ளைக்கும் உள்ள தொடர்பும் அறிவியல் பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. இது ஒரு தன்னம்பிக்கை நூல் மட்டுமல்ல, நமது உணர்சிகளுக்கான காரணங்களை அலசி ஆராயும் உளவியல் நூலும் கூட.

எமோஷனல் இன்டலிஜென்ஸ் குறித்து தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவே. தனிப்பட்ட வாழ்க்கையிலும், பணிபுரியும் இடத்திலும், சில நேரங்களில் உணர்சிகளை கட்டுப்படுத்த தவறி  விடுகிறீர்களா? அப்படியானால் இந்த புத்தகம் உங்களுக்கானது.

  • நூலின் பெயர் : இட்லியாக இருங்கள்
  • ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்
  • பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்

Monday, April 23, 2012

உங்களது நேரத்தை சரியாக செலவிட வேண்டுமா?


தினசரி காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் வேளைகளில் ஒன்று அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளை குறித்து வைத்துக் கொள்வது. இதற்கு To Do List என்று பெயர். வழக்கமாக துண்டு காகிதம், நாளிதழ்களின் ஓரம், கல்யாண பத்திரிக்கையின் ஓரம் என்று எழுதி வைத்துக் கொள்வோம். லோஞ்சம் ஒழுங்காக இருப்பவர்கள் ஒரு நோட்டு போட்டு குறித்து வைத்துக் கொள்வார்கள். அதுவே நீங்கள் பெரிய நிறுவனமொன்றின் அதிகாரியாக இருந்தால் உங்கள் உதவியாளர் ஒரு டைரி போட்டு மணிக்கு மணி உங்கள் அப்பாயின்ட்மென்ட் ஐ குறித்து வைத்திக் கொள்வார்.

எப்படியானாலும் எல்லோருக்கும் ஒரு அட்டவணை இருக்கின்றது. அதைப் பின்பற்றுகிறோமோ இல்லையோ குறித்து வைத்துக் கொள்ளவாவது விரும்புகிறோம். இப்போது ஆன்லைனில் இந்த 'To Do List 'ஐ உருவாக்கலாம். அதில் சிறப்பாக உள்ள இணையதளம். http ://voo2do .com

'Voo2Do' வில் இலவசமாக பதிவு செய்து கொண்டு, நாம் ஈடுபட்டுள்ள பிராஜெக்டுகளின் விவரங்கள், தேதிகள் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொண்டால் போதும். ஒவ்வொரு வேலையையும் செய்து முடிக்க எவ்வளவு நேரம் ஆயிற்று, இன்னும் எத்தனை நாட்களில் முடிக்க வேண்டும் என்றெல்லாம் இந்த லிஸ்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இதே போன்ற சேவையை வழங்கும் பிற வலைத்தளங்கள்:

http://www.tadalist.com/


http://rememberthemilk.com/


உங்களுக்கு வேறு சில வலைத்தளங்கள் தெரிந்திருந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்.

Sunday, April 22, 2012

நேரத்தை சேமிக்க உதவும் 3 எளிய இணையதள மென்பொருள்கள்.

நேரத்தை சேமிக்க  உதவும் 3 எளிய இணையதள மென்பொருள்கள்.

இன்றைய கால கட்டத்தில் ஏராளமான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. இப்பொழுது அவற்றை எல்லாம் தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்த வேண்டியதில்லை. ஆன்லைனிலேயே உபயோகப்படுத்த முடியும். கீழே குறிப்பிட்டுள்ள 3 மென்பொருள்கள், உபயோகப்படுத்த மிகவும் எளிமையானவை.

Ninite

ஒரு புதிய கம்ப்யுட்டருக்கு தேவையான மென்பொருள்களை நிறுவுவது சற்று சிரமமான வேலை . சிலநேரங்களில் எட்டு மணி நேரத்திற்கும் மேல் நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும். முதலில் தேவையான மென்பொருள்களை தரவிறக்கம் செய்ய வேண்டும், பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக நிறுவ வேண்டும். எல்லா மென்பொருள்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் வசதிதானே?


Ge.tt

இணையத்தில் அட்டாச்மென்ட்களை மற்றவர்களுடன் பகிந்து கொள்ள எளிய வழி இதோ. Ge.tt இந்த தளத்தில் பெரிய பைல்களை மிக எளிதாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.



 
இந்த தளம், பைல் கர்வெர்சனுக்கு மிகவும் உதவும். குறிப்பிட்ட மென்பொருள் நம்மிடம் இல்லாவிட்டால் நம்மால் சில பைல்களை திறக்க முடியாது. பைலை ஒரு பார்மேட்டிலிருந்து மற்றொரு பார்மேட்டிற்கு மாற்ற இந்த இணைய தளம் உதவும்.
 
இது போன்ற மற்ற தளங்கள் உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து கீழே தெரிவிக்கவும், மற்றவர்களுக்கும் உதவும்.
 

Thursday, April 19, 2012

வெற்றிக்கு ஒரு புத்தகம் - வானமே எல்லை (Simply Fly)

நான் பொதுவாக ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படும் புத்தகங்களை விரும்பி படிப்பதில்லை,  எழுத்துக்கள் தமிழில் இருந்தாலும் மொழி பெயர்ப்பு நூல்கள் எனக்கு அந்நியமாகவே தோன்றும். அனால் இந்த புத்தகம் நேரடியாக தமிழிலேயே எழுதப்பட்டது போன்று ஒரு தெளிவு. மிகச் சிறப்பாக மொழி பெயர்த்த திரு BR மகாதேவன் அவர்களுக்கு முதலில் ஒரு 'சல்யூட்'

'முன் எப்போதும் இல்லாத வாடிக்கையாளர்களையும், புதிய சந்தையையும் உருவாக்கி அதன் மூலம் செல்வம் சேர்ப்பவரே உண்மையான தொழில் முனைவர்' ன்னு சொல்றத கோபிநாத் அவர்களின் வாழ்க்கை நிருபித்து காட்டியிருக்கிறது. சாகசங்களையும், சவால்களையும் எதிகொள்ள துளியும் பயப்படாத துணிச்சலான செயல் வீரரின் கதை தான் இந்த புத்தகம்.

 'வானத்தை லட்சியமா வை, பூமிய பார்த்து நட'ன்னு  சொல்லுவாங்க, அப்படி வாழ்ந்து காட்டிய செயல் வீரர் தான் இந்த கோபிநாத். சாதாரண மனிதர்களுக்கு எட்டாத பல சாகசங்களை நடத்தி காட்டியிருக்கிறார். இவர் ஆரம்பித்த குறைந்த கட்டண விமான சேவை (Air Deccan) இந்திய வான் போக்குவரத்தையே அடியோடு மாற்றியமைத்து.

 சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில், ஒரு ஆசிரியருக்கு மகனாக பிறந்த கோபிநாத் இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். பால்  பண்ணை, பட்டு பூச்சி வளர்ப்பு, மோட்டார் பைக் ஏஜென்சி, ஹோட்டல் தொழில், பங்கு சந்தை தரகர் என்று பல தொழில்களை செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தேவ கவுடாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியையும் தழுவியிருக்கிறார். தான் வாழ்க்கை முழுதும் புது புது முயற்சிகளை சலிக்காமல் செய்துள்ளார்.

தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் முக்கியம்னு சொல்லுவாங்க, ஆனால் கோபிநாத், மிகப்பெரிய முடிவுகளையெல்லாம் மின்னல் வேகத்தில்  எடுத்து சாதித்து கட்டியிருக்கிறார். நீங்கள் ஏதாவது புதுசா சாதிக்கணும்னு நினைக்கிறிங்களா? அடி மேல் அடி விழுதா? சோர்ந்து போய் விட்டீர்களா? இந்த புத்தம் உங்களுக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சியைத்  தரும்.

தொழில் முனைவோருக்கு வேண்டிய தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தலைமைபண்பு, முடிவெடுக்கும் திறன் போன்ற பல பாடங்கள் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ' கல்லூரிகளில் இந்த புத்தகத்தை பாடமாக வைக்க வேண்டும்' என்கிறார் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

ஒரு சாதாரண ஆசிரியருக்கு மகனாக பிறந்த, ராணுவத்தில் இருந்து வெளியே  வரும்போது ரூபாய் 6 ,000  மட்டுமே செட்டில்மென்ட் பணமாக பெற்ற கோபிநாத், அதிக மூலதம் தேவைப் படக்கூடிய விமான சேவையை எப்படி ஆரம்பித்தார், எப்படி சாதித்தார் என்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால் இந்த புத்தகம் உங்களுக்கானது.

ஒவ்வொருவரும்  வாழ்வில் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய சாதனை சரித்திரம் இந்த 'வானமே எல்லை'

Wednesday, April 18, 2012

பிஸினஸில் ஜெயிக்க 10 விஷயங்கள்!



வெற்றி என்பது நொடியில் வந்து சேரும் விஷயமல்ல. ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து அடைய வேண்டிய சிகரம் அது! அந்த சிகரம் தொட சில விஷயங்களை நாம் சரியாகச் செய்தாக வேண்டும். ஒரு தொழில்முனைவோர் நிச்சயமாக வெற்றி பெற எந்தெந்த விஷயங்களை சரியாகச் செய்யவேண்டும், எதில் அதிகக் கவனமாக இருக்கவேண்டும் என்பது குறித்த பட்டியல் இதோ.

1. தனித்தன்மை


 நீங்கள் ஆரம்பிக்கும் பிசினெஸ் தனித்தன்மையுடன் உள்ளதா என்பதை முதலில் உறுதி செய்யுங்கள்.  மனிதன் ஒவ்வொருவரும் தனித்தன்மை உடையவன். ஒருவர் மாதிரி இன்னொருவர் இருப்பதில்லை. ஒவ்வொருவரிடத்திலும் ஒரு தனித்தன்மை ஜொலிக்கவே செய்கிறது. ஆனால் பிஸினஸ் என்று வரும்போது நமக்கிருக்கும் தனித்தன்மையை சுத்தமாக மறந்துவிட்டு, சுற்றும்முற்றும் பார்த்து 'காப்பி' அடிக்கிறோம்.

உங்கள் ஏரியாவில் நிறைய  மளிகை கடை இருக்கின்றதென்று நீங்களும் ஒரு மளிகைக்கடையை  திறந்தால் அது பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கும். ஏற்கெனவே ஒரு பிஸினஸூக்குப் போட்டியாக இன்னொன்றை நீங்கள் ஏன் தொடங்க வேண்டும்? போட்டியே இல்லாத ஒரு புதிய பிஸினஸை ஆரம்பித்தால்தான் உங்களுக்கான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

2. போதிய அளவு முதலீடு.

இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, போதிய அளவு பணம் இல்லாமல் பிஸினஸில் ஈடுபடாதீர்கள் இதற்காக, என்னிடம் பணமில்லை, எனவே நான் எப்படித் தொழிலை தொடர்வது என்று மலைக்க வேண்டாம். பணம் உங்களுடையதாக இருக்கலாம் அல்லது வங்கியில் கடன் வாங்கியதாக இருக்கலாம்;  பிரச்னைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் உங்கள் கையில் பணம் இருக்கவேண்டும்.

நீங்கள் செய்யும் பிஸினஸில் அதிக லாபம் வரலாம்; ஆனால் கையில் போதிய பணம் இல்லை என்றால் உங்களால் நீண்ட நாளைக்கு பிஸினஸில் தாக்குப் பிடிக்கமுடியாது. ஆனால் உங்கள் பிஸினஸில் லாபம் இல்லை என்றாலும், கையில் பணம் இருந்தால் நீண்ட நாளைக்கு உங்களால் பிஸினஸ் செய்யமுடியும். உங்களிடம் இருக்கும் பணப்புழக்கமே உங்கள் நம்பகதன்மையை அதிகரிக்கச் செய்யும். வங்கிகளும் மற்ற நிதி நிறுவனங்களும் உங்களுக்கு இன்னும் கடன் கொடுக்க முன்வரும்.

3. பணப்புழக்கம்.

நீங்கள் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் கையில் பணப்புழக்கம் இல்லாவிட்டால்  எந்தப் பிரயோஜனமும் இல்லை. உங்கள் நிறுவனத்தில் பணப்புழக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம். அது மட்டுமே யதார்த்தம், மற்றதெல்லாம் மாயை. பெரும்பாலான தொழில்முனைவோர்கள் பணப்புழக்கத்தில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. அதிகப் பணப்புழக்கம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே அடுத்து என்ன, என்ன என்று யோசிக்கிறது.

4. வாடிக்கையாளர் தொடர்பு.

ஒரு நல்ல பிஸினஸ்மேனுக்கு அழகு, வாடிக்கை யாளர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது. உங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து அந்தச் சேவையையோ அல்லது பொருளையோ கொடுத்தால் அவர்கள் உங்களை விட்டு வேறு இடத்துக்குப் போகவே மாட்டார்கள். 

புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குவதைவிட ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் விற்பது லாபகரமாக இருக்கும். அவர்கள் உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

5. எண்களைக் கவனித்தல்.

உங்கள் நிறுவனத்தின் எண்களை எப்போதும் துல்லியமாக ஞாபகம் வைத்திருங்கள். விற்பனை, லாபம், கடன், நிறுவனம் எப்போது பிரேக் ஈவன் (Break even) அடையும் என்பது போன்ற விஷயங்களை குழப்பமில்லாமல் தெரிந்து வைத்திருங்கள். 

உங்கள் பிஸினஸ் எப்போது பிரேக் ஈவன் அடையும் என்று உங்களுக்குத் தெரிந்தால்தான் தேவையான பணப் புழக்கத்தை உங்களால் கொண்டு வரமுடியும். பணப்புழக்கம் இருந்தால்தான் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும். 

ஆனால் பிரேக் ஈவன் அடைவது மட்டுமே உங்கள் லட்சியமாக இருக்கக்கூடாது. அது குறைந்த பட்ச இலக்கு. லாபமும் நஷ்டமும் இல்லாத ஒரு நிலைதான் அது. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நீங்கள் தொடர்ந்து முன்னேறித்தான் ஆகவேண்டும்.

6. ஆலோசகர்கள் தொடர்பு.

உங்கள் நலன் விரும்பும் ஆலோசகர்களையும் நலன் விரும்பிகளையும் அதிகரித்துக் கொண்டே இருங்கள். ஏற்கெனவே பிஸினஸில் இருப்பவர் களிடம் தொடர்பில் இருங்கள். அவர்களிடம் அடிக்கடி பேசுங்கள். அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது சம்பந்தமாக பயனுள்ள கருத்துக்களை அவர்கள் சொல்வார்கள். 

வெற்றியடைந்த தொழிலதிபர்கள் வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களை நிச்சயம் ஊக்கப்படுத்து வார்கள். அவர்களைப் போன்றவர்களிடம் உதவி கேட்கத் தயங்காதீர்கள். ஒருவேளை அவர்கள் இல்லை என்று சொன்னால்கூட அதனால் பெரிய பாதிப்பு உங்களுக்கு வந்துவிடாது.

7. வாடிக்கையாளர்கள் பார்வையில் சிந்தித்தல்.

எப்போதும் வாடிக்கையாளர் பார்வையில் பிஸினஸை சிந்தியுங்கள்.  நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைவிட வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க் கிறார்கள் என்பதே முக்கியம்.

8. திட்டமிடுதல்.

ஐந்தாண்டுகளுக்கு பிறகு உங்கள் நிறுவனம் எப்படி இருக்கவேண்டும் என்று இப்போதே திட்டமிடுங்கள், கனவு காணுங்கள். இந்த கனவு உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும். உங்கள் கனவை உங்கள் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

அந்த கனவு நோக்கிச் செல்ல அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். உங்கள் கனவு யதார்த்தத்தில் நடக்காது என்று சொன்னால் அதற்காக கவலைப்படாதீர்கள். பிஸினஸ் உலகில் எல்லா கனவுகளும் சாத்தியம்தான்.

9. திரும்பிப் பார்த்தல்.

நீங்கள் கடந்து வந்த பாதையை அடிக்கடி திரும்பிப் பாருங்கள். அதாவது, உங்கள் கணக்கு வழக்குகளைத் திருப்பிப் பாருங்கள். இதை எப்போதும் தவிர்க்காதீர்கள். 


10. ஒரே சிந்தனை

மற்ற பிஸினஸ்களில் இருந்து உங்கள் பிஸினஸை எப்படி வித்தியாசப்படுத்துவது என்பது பற்றி சிந்தித்துக் கொண்டே இருங்கள். இந்த தனித்தன்மையான சிந்தனைதான் போட்டி இல்லாத நிலையை உருவாக்கும்.

Tuesday, April 17, 2012

ஒரு கம்பெனியை ஆரம்பித்து, அதன் பெயரை அரசிடம் பதிவு செய்ய என்ன செய்யவேண்டும்?


 இதற்கென்று தனி விண்ணப்பம் இருக்கிறது. மத்திய அரசின் கம்பெனி நிர்வாகத் துறையின் இணைய தளத்தில் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையத்திலேயே பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவேண்டும். விண்ணப்பிக்கும்போது நிறுவனத்துக்கு நான்கு பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.

அந்த பெயர்கள் ஏற்கெனவே பதிவு செய்யாத பெயர்களாக இருந்தால் நான்கில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம். நான்கில் ஏதேனும் ஒன்றிரண்டு பதிவு செய்திருந்தால் அதை விட்டுவிட்டு மீதமுள்ளவற்றில் தேர்வு செய்துகொள்ளலாம்.

மேலும் மெமராண்டம் ஆஃப் அசோஸியேஷன், ஆர்டிக்கிள்ஸ் ஆஃப் அசோஸியேஷன் போன்ற முக்கியமான டாகுமென்டுகள் இணைக்கப்படவேண்டும். இதில் கம்பெனியின் நோக்கம் என்ன, எந்த வகையானது, எவ்வளவு முதலீடு, நிறுவனம் அமைய உள்ள இடம், பிரைவேட் நிறுவனமா, பப்ளிக் நிறுவனமா என்பன போன்ற தகவல்களை எல்லாம் தரவேண்டும்.

உங்களுடைய நோக்கமும், இதர விஷயங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் ஒரே வாரத்தில் பதிவு செய்வதற்கான தகவலை ரிஜிஸ்ட்ரேஷன் ஆஃப் கம்பெனியில் இருந்து அனுப்பி வைப்பார்கள். நாம் தந்த தகவல்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் திருத்தம் செய்து அனுப்பி வைக்கவேண்டும்.
பிரைவேட் லிமிடெட் நிறுவனம் என்றால் ஒரு லட்சம் ரூபாய் முதலீடாகவும், பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக இருந்தால் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடாகவும் இருக்கவேண்டும்.

முதலீடு எந்தளவுக்கு என்பதைப் பொறுத்து பதிவுக் கட்டணம் மாறுபடும். பெயரைப் பதிவு செய்த இரண்டு மாதத்துக்குள் நிறுவனத்தைப் பதிவு செய்யவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: http://india.gov.in/howdo/otherservice_details.php?service=19



தொழிலுக்கான ஆரம்ப கட்ட முதலீட்டை திரட்டுவது எப்படி?

ஞ்சல் முதலீட்டாளர்கள்யார்?

ஆரம்ப நிலை கம்பெனிகளில், பங்குகளிலோ அல்லது அதைச் சார்ந்த பத்திரங்களிலோ முதலீடு செய்யும் பணக்கார முதலீட்டாளர்களையே 'ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ்' என்று சொல்கிறோம்.


 ஏஞ்சல் முதலீட்டாளர்கள்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகையினர், பிஸினஸ் ஏஞ்சல்கள். இவ்வகை முதலீட்டாளர்கள் பரம்பரை பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. சாதாரண நிலைமையில் பிறந்து, பின்னர் தொழில்முனைவராக உருவெடுத்து, அதில் அபார வெற்றி பெற்று, பேரும், புகழும், பணமும் சம்பாதித்தவர்கள். ஆரம்பநிலை நிறுவனங்கள் நிதி திரட்டுவது கடினம். பொருள் திரட்ட முடியாத காரணத்தால் பல இளம் தொழில்முனைவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டதுண்டு. தாங்கள்பட்ட கஷ்டத்தை மற்றவர்களும் படக்கூடாது என்பதற்காக, வருங்கால தொழில்முனைபவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதே இத்தகைய பிஸினஸ் ஏஞ்சல்களின் நோக்கம்.

தொழில் முனைந்து, அதை நன்கு வளர்ச்சி அடையச் செய்த ஆழ்ந்த அனுபவத்தால், பிஸினஸின் வளர்ச்சிப் பாதை யில் ஏற்படுகிற சிக்கல்களைப் பற்றியும், அதை அணுகுகிற முறை பற்றியும் இவர்கள் நன்கு அறிவார்கள். இவ்வகை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதோடு மட்டும் நின்று விடுவதில்லை. முதலீடு செய்தபின் அந்நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு தேவையான உதவி களை முடிந்தவரை செய்ய விருப்பப்படுவார்கள்.
 
இரண்டாவது வகையினர், ஃபைனான்ஷியல் ஏஞ்சல்கள். இவர்கள் பெரும்பாலும் முனைப்பற்ற முதலீட்டாளர்களாகவே இருப்பார்கள். முதலீடு செய்த நிறுவனத்தில் பிஸினஸ் ஏஞ்சல்கள்  போன்று அவ்வளவு ஈடுபாடு காட்டமாட்டார்கள். அதற்கான நேரமோ அல்லது அனுபவமோ அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். இவ்வகை முதலீட்டாளர்கள் உரிமையாளரின் திறனின் மேல் உள்ள முழுநம்பிக்கையின் பேரில்தான் முதலீடு செய்கிறார்கள். அதனால், நன்கு பரிச்சயமான நண்பர்கள் தொடங்கும் தொழிலிலோ அல்லது நெருங்கிய நண்பர் களின் சிபாரிசின்பேரில் வரும் கம்பெனிகளிலோ மட்டும்தான் முதலீடு செய்வார்கள்.

என்ன வித்தியாசம்!

ஞ்சல் முதலீட்டாளர்களுக்கும் வங்கிக் கடனுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.


  • வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் தந்த வைப்பு நிதியை, கடனாக தருகின்றன. ஆனால், ஏஞ்சல் முதலீட்டாளர்களோ தங்கள் சொந்த பணத்தை முதலீடு செய்கிறார்கள். அதனால், அவர்கள் நிதி தருவதற்கு முன் தீர்க்கமாக விசாரித்தே தருவார்கள்.
  • முதலீடு செய்யும் கம்பெனிகளை தேர்வு செய்வதில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மிக கவனமாக இருப்பார்கள். உதாரணமாக, 'சென்னை ஏஞ்சல்ஸ்’ ஆரம்பித்த முதல் மூன்று வருடங்களில் ஐந்து நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்துள்ளது. ஆனால், வங்கிகள் கடன் கொடுப்பதோ இதைக் காட்டிலும் சற்று தாராளமாகவே இருக்கும்.
  • ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து ஒரு சுற்றில் திரட்டும் நிதி சராசரியாக 20 லட்சத்தைத் தாண்டாது. வங்கிகளிடமிருந்தோ இன்னும் அதிக அளவில் கடன் பெறலாம்.

ஒரு காலத்தில்  ஏஞ்சல் முதலீட்டாளர்கள் என்பவர் யார், அவர்களை எப்படி அணுகுவது? போன்ற கேள்விகளுக்கு எளிதில் பதில் கிடைக்காது. ஆனால், கடந்த சில வருடங்களில் பல ஏஞ்சல் முதலீட்டாளர்கள் இணையதளம் மூலம் தங்கள் முதலீடு செய்யும் நோக்கத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு சில ஏஞ்சல் முதலீட்டாளர்களின் இன்வெஸ்டர்ஸ் இணையதள விவரங்கள் இதோ:

Monday, April 16, 2012

பிளே ஸ்கூல் தொடங்குவது லாபகரமானதா?



கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக அருமையான வாய்ப்பைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு, எதில் முதலீடு செய்யலாம் என்று வேறெங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அருமையான வாய்ப்பு வேறெதுவும் இல்லை, கல்வித் துறைதான். கோடிகளில் முதலீடுகள் குவியும் ஒரு முக்கியத் துறையாக அது மாறியிருக்கிறது. கல்வித் துறையில் சூப்பரான பல வாய்ப்புகள் இருக்கின்றன. சில ஆச்சரியமான புள்ளிவிவரங்கள்...
  • இந்தியா முழுக்க இருக்கும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 9.5 லட்சம்.
  • தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2.4 லட்சம்.
  • அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 10 கோடி.
  • தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 10 கோடி.
  • சுமார் 14 கோடி குழந்தைகள் ஆரம்ப மற்றும் உயர்கல்வி கிடைக்காத நிலையில் இருக்கின்றனர்.
  • 30 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 14.40 லட்சம் கோடி) மதிப்பு கொண்ட இந்திய கல்வித்துறை அடுத்து பத்து ஆண்டுகளில் 70 பில்லியன் டாலர் கொண்ட துறையாக வளரப் போகிறது!
மேற்சொன்ன இந்த புள்ளிவிவரங்களை மேலோட்டமாகக் கவனித்தாலே போதும், இந்திய கல்வித் துறையின் மார்க்கெட் எவ்வளவு பெரிது என்பது உங்களுக்குப் புரிந்துவிடும்.

இன்றைய கால கட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் பிளே ஸ்கூலுக்கு நல்ல தேவை உள்ளது.  நாமாக தொடங்குவதை விட பெரிய பிராண்டுகளின் பிரன்சைசீ ஆக தொடங்கினால் தொழிலை கற்றுகொள்வது எளிது.

இன்னும் அதிக விவரங்களுக்கு  இந்த லிங்கில் உள்ள எலெக்ட்ரானிக் புத்தகத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

பிளே ஸ்கூல் தொடங்குவது எப்படி?


மில்லியன் டாலர் ஹோம் பேஜ்

மில்லியன் டாலர் ஹோம் பேஜ் 


http://www.milliondollarhomepage.com

மாற்று  சிந்தனை ( லேட்ரல் திங்கிங்) என்பது இல்லாத ஒன்றை கண்டு பிடிப்பது அல்ல. நமது சிந்தனையை கொஞ்சம் மாற்றுவது. பார்வை கோணத்தில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் சிறிய பிரச்சனைகளை மட்டுமல்ல, மிகப்பெரிய சமூக கோளாறுகளை கூட தீர்க்க முடியும். சில் நேரங்களில் நாம் அற்பமாக நினைக்கும் தீர்வு கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இங்கிலாந்தை சேர்ந்த அலெக்சுக்கு ஒரு மில்லியனர் ஆக வேண்டுமென்பது நீண்டநாள் கனவு. லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலம் எப்படி பணக்காரன் ஆகலாம் என்று யோசித்த அலெக்ஸ் செய்தது ஒன்றே ஒன்றுதான். அவர் செய்ததெல்லாம் ஒரு இணைய தளத்தை உருவாக்கியது தான். இணைய தளத்தின் இடத்தை பத்து லட்சம் சிறிய கட்டங்களாக பிரித்த அலெக்ஸ், ஒவ்வொரு கட்டமும் ஒரு டாலர் என்று விற்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும், புதுமையான விளம்பர உத்தியாக இருகின்றதே என்று, பெரிய நிறுவனங்கள் சில பிக்சல்களை பதிவு செய்து விளம்பரம் செய்ய முன் வந்தன. வாய்வழி தகவல்கள் மூலம், இந்த தளத்திற்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, சில மாதங்களில் எல்லா கட்டங்களும் விற்று தீர்ந்தன. மிகக் குறுகிய காலத்தில் 1 மில்லியன் (4500000 ரூபாய்) சம்பாதித்து மில்லியனர்  ஆனார் 21 வயதே ஆன அலெக்ஸ்.

அலெக்சுக்கு தோன்றிய இந்த சிந்தனை நமக்கும் தோன்றும், அனால் நாம் அதை அற்பமாக நினைத்து செயல் படுத்த தயங்குவோம். அனால் அதை செயல் படுத்தியது தான் அவரை மில்லியனர் ஆக்கியது.
http://www.milliondollarhomepage.com

நாமும் தீர்வை தேடும் போது பார்வை கோணத்தை மாற்றி சிந்திப்போம். 

டான்ஸ்டியா தரும் சுயதொழில் பயிற்சிகள்

http://www.tanstiafnf.com/

தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவர் அனைவருக்கும் டான்ஸ்டியா பற்றி தெரிந்திருக்கும். இது தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவர்களுக்கும், வங்கிகளுக்கும் மற்றும் அரசுக்கும் பாலமாக விளங்குகின்றது. தமிழகம் முழுவதும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தி வருகின்றது.
 
ரூபாய் 100 கட்டணத்தில், திட்ட அறிக்கை கொடுக்கும் இந்த நிறுவனம் பல லாபகரமான துறைகளை தேர்ந்தெடுத்து ( தையல், தோல் பொருள்கள், தகவல் தொழில் நுட்பம் மற்றும் பல) பயிற்சி அளித்து தொழில் முனைவர்களை ஊக்குவித்து வருகின்றது.

டான்ஸ்டியாவின் இணையதளம் :
http://www.tanstiafnf.com

Sunday, April 15, 2012

ஏற்றுமதி செய்யப் போகும் கம்பெனியின் ஜாதகத்தை அறிய!!

இண்டர்நெட்டில் பல சமயங்களில் தகவல்கள் இலவசமாக கிடைத்தாலும், தகவல்கள் நம்ப தகுந்ததா என்ற சந்தேகம் பலருக்கு வரும். அதுவும் வெளிநாட்டில் உள்ள கம்பெனிகளை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்பிக்கையான இணையதளம் வேண்டும்.

இந்த இணையதளம் உலகத்தின் 50 மில்லியன் கம்பெனிகளுடைய தகவல்களை திரட்டி வைத்திருக்கிறது.  உங்களுக்கு ஒரு கம்பெனி ஆர்டர் கொடுத்து அந்த கம்பெனி நல்ல கம்பெனியா என்று தெரிந்து கொள்ள உதவும் இந்த இணையதளம்.

ஏற்றுமதியாளர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வலைத்தளம் இது.

http://www.skyminder.com/

Saturday, April 14, 2012

யார் தவறு?



ரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் கட்டுப்பாடே  இல்லாமல் லீவு எடுக்கிறார்கள். வெட்டி அரட்டை அடிக்கிறார்கள். இது யார் தவறு? தொழிலாளர்கள் தவறா, மேனேஜர் தவறா?

கி.மு. 500 காலகட்டத்தில் சீனாவில் வாழ்ந்த சன் ஸூ (Sun Tzu), யுத்தம் தொடர்பான ராஜதந்திரங்களில் மாமேதை. இவர் எழுதிய யுத்தக் கலை (Art of War) புத்தகத்தில் மேற் சொன்ன பிரச்னைக்கு தீர்வு சொல்கிறார்.

180 பெண்களுக்கு போர்ப் பயிற்சிகள் கொடுத்தார் சன் ஸூ. 90 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரித்தார். பயிற்சிகள் முடிந்தவுடன், போட்டிகள் நடந்தன. இரண்டாம் அணியைச் சேர்ந்த பெரும்பாலானோர் செமையாகச் சொதப்பினார்கள்.

திறமையுடன் விளையாடிய முதல் அணியின் வீரர்கள் பாராட்டப்பட்டனர். இரண்டாம் அணி வீரர்களுக்குத் தண்டனை அளிக்கத் தயாரானார் அரசர். உடனே தடுத்தார் சன் ஸூ.

'மன்னரே, இரண்டாம் அணியில் எல்லோருமே தவறு செய்தார்கள். ஆக, அது அவர்கள் தவறல்ல, தலைமையின் தவறுதான். எனவே, தலைமைக்குத்தான் தண்டனை தரவேண்டும்!'' என்றார். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே, யார் தவறு என்று?


The Art of War by Sun Tzu